07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, April 9, 2013

தனிமரம் சுற்றும் வேர்கள்.


ஒவ்வொரு பதிவாளர்களுக்கும் எழுதுவதற்கு ஆர்வத்தை ஊட்டும் முதல் காரணி வாசிப்புத் தேடல் தான் வாசிக்கும் நேரத்தில் சிந்தனைச்சிறகு காற்றில் பறக்கும் !



அப்போது சொல்ல வந்ததை சொல்லத் தொடங்கினால் தொடர் சுகமாக இருக்கும் தொடராக .பதிவுலகில் தொடர்  தொல்லை என்றாலும் அதையும் கூட ஹிட் கொடுத்தவர் இவர் .அப்படித் தொடர்ந்து இரண்டு தொடர் படிக்கும் வசதியை எனக்கும் தந்தார் அதன் மூலம் நான் பலரை இவர்தளத்தில் இருந்து ஈர்த்தேன் .அவர்களுடன் இன்றும் நட்புடன் பயணிக்கின்றேன் அவர் எனக்கு இன்னொரு வழிகாட்டி வலை உறவுகளுடன்  எப்படி நட்பு பாராட்டுவது என்பதில் எனக்குப் பிடிக்காத ஹான்சிஹா இவருக்குப் பிடிக்கும் ஹீ .
               
 
அவர் தான் செங்கோவி ஐயா .
இவரின் தொடர் ,நானாக ஜோசித்தேன் என்று மட்டுமா ?அரசியல் பகிர்வு, சினிமா விமர்சனம் ,என பலதுறையில் ஆடும் பெரியவர் .http://sengovi.blogspot.fr/2012_09_01_archive.html

எப்போதும் சின்னவயதில் நான் மாட்டு வண்டியில் அதிகம் பயணம் செய்தவன்.ஆனால் இவரோ நடை வண்டி என்றுவிட்டு இத்தனை ஜாம்பாவான்களுடன் பழகும் வாய்ப்பை எந்த ஐயன்(ஆண்டவன்)இவருக்கு கொடுத்தான் என்று பொறாமை மேலிடும் .


இந்த தொடரை வாசிக்க்கும் போது !

பலர் நிச்சயம் வாசிக்க வேண்டும் புதியவர்களுக்கு ஒரு பொக்கிசம் இந்த தொடர் .http://minnalvarigal.blogspot.com/2012/06/22.html ,அதுகடந்து கதை நகைச்சுவை மொறு மொறு மிக்சர் என்று எல்லா ஏரியாவும் கலக்கும் இவரை நான் அண்ணா என்று அழைக்கும் உரிமையை எனக்கும் தந்த மூத்தவர்!

மேய்ச்சல் மைதானம் அதிகம் அவருக்குத் தெரியாமல் வாசிக்கும் ஒரு வாசகன்  தொடர்ந்து நல்ல நூல்களை அறிமுகம் செய்யவேண்டும் எங்கள் கணேஸ் அண்ணா!


கவிதையிலும் தொடர் எழுத முடியும் என்று கலக்கும் இந்த ஐயாவிடம் எனக்கு பயம் அதிகம் .
                       

எப்படி எல்லாம் சிந்திக்கின்றார் என்று அவரின் கவிதையில் இந்தகவிதை ஏனோ எனக்கு ஒரு பொக்கிசம் .http://yaathoramani.blogspot.fr/2012/12/blog-post_25.html.



இவரை கடந்து வந்தால் ஒரு பால்க்கோப்பி கிடைக்குமா ,என்றால் அதுக்கு தேவை சீனி.

 அது இவர்தளத்தில் கிடைக்கும் கவிதைத் தொடராக. பலர் இவரை ஊக்கிவிக்க வேண்டும் நம் சீனிகவிதைகளை .



அங்கே எனக்கு அதிகம் இந்த அரசியல் நொடி பிடிக்கும் .http://seeni-kavithaigal.blogspot.fr/2012/12/23.html


தொடர் எழுதுவதில் இவருக்கு அலுப்பு அதிகம் தான் ஜாலி ஆனவர் என்றாலும் இந்த சார் எனக்கு இன்னொரு நட்பு இவரோடு நான் போடாத சண்டை இல்லை .



ஆனால் இந்த தொடர் பலர் படிக்கவேண்டும் ஆற்றுப்படுத்தல் மிகத்தேவை நம் பலருக்கு!http://www.thamilnattu.com/2012/01/blog-post_6683.html. பலவிடயம் இவர் தொட்டது இப்போது கொஞ்சம் பிசியாம் முகநூலில்:)))


இவரை அதிகம் பலர் அறியவில்லை ஏனோ என்றாலும் இந்தத்தொடர் நம் வரலாற்றில் ஒரு பக்கத்தில் வரவேண்டும் ஈழத்து இலக்கியவானில்  நேரம் எடுத்து படியுங்கள் உறவுகளே .http://poonka.blogspot.fr/2013/02/5.html

         
கவிதை தாண்டி இவர் தொடரில் தொடரவேண்டும் என்பது என் விருப்பம்!



அங்கிருந்து வாங்க இப்படியும் காதலில் கரையலாமா உன்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா என்று இவரும் கலக்கிய தொடர் இந்த மின்நூல் எனக்கு எல்லாம் ஒரு வழிகாட்டியது கற்றது தமிழ் இவர் தளம்.http://www.thusyanthan.com/2012_01_01_archive.html இப்போது பட்சி கொஞ்சம் கானக்காணகின்றேன் கனக்காண்கின்றேன் கைபேசி அழைப்பில் ரின் டோன் !) மீண்டும் வந்து எழுதுங்க பாஸ் !

அவர் இருக்கும் பாரிசில் தான் இந்த பஸ் போகின்றது.படியுங்கள் சிலிர்க்கும்http://www.dpirasath.com/2012/10/blog-post.html ஏனோ அதிகம் எழுதுவது இல்லை சாய்பிரசாத்!
                     

இதன் பின் படிக்கலாம் பேய்த் தொடர் சுவாரசியம் நிறைந்தது .சலங்கை ஒலி தொடர்கின்றது வீச்சாக நாலாணா ஊழல் கதை தொக்கிய வண்ணம்  இவர் தளம் மரத்தின் முதல் அடி தளிர் .அருமையான புறநானூறு போர்க்களம் பற்றி அருமையாக பலர் மறந்த பாடலை பதிவு செய்து இருக்கின்றார். இந்த பகிர்வில் http://thalirssb.blogspot.fr/2013_03_01_archive.htmlஅவருக்கு நேர் எதிர் இந்த தம்பியிடம் .


யுத்தம் இல்லாத உலகம் கேட்டார் http://www.nanparkal.com/2012/11/8.htmlஏனோ சுருதி குறைத்துவிட்டார் பதிவுலகில் இப்போது .கிரிக்கட் போல இவரும் ஒரு சகலதுறை ஆட்டக்கார் பதிவுலகில் கொஞ்சம் அதிகம் தொடர் இருக்கு இந்த நண்பர்கள் தளத்தில்!


என்றாலும் நானும் இவரும் துசியும் சினேஹாவை வைத்து முகநூலில் கும்மி அடிக்கும் போது அண்ணி வருவாங்கோ பூரிக்கட்டையோடு ஓடிவிடுங்க தனிமரம் என்று கலாய்ப்பதில் எங்கள் நட்பு இன்னொரு உறவு இவர்களை எனக்கு அறிமுகம் செய்தவர்கள் கூட ஜோசிப்பது எப்படி இப்படி ஒரு செட் சேர்ந்தது என்று!

                                    மீண்டும் சந்திப்போம்..............

18 comments:

  1. அனைவரும் நாம் அறிந்த சிறந்த பதிவாளர்களே வாழ்த்துக்கள்
    பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் இன்று அறிமுகமான எம் வலைத்தள நட்புகளுக்கும் !

    ReplyDelete
  2. தனி மரம் சகோ..!

    மலைகளுக்கிடையில் நானுமா..!?

    பயத்துடனும்-
    சிறு மகிழ்வுடனும்...!

    பயணிக்கிறேன்!

    மிக்க நன்றி சகோதரா...!!!

    ReplyDelete
  3. "ஒவ்வொரு பதிவாளர்களுக்கும் எழுதுவதற்கு ஆர்வத்தை ஊட்டும் முதல் காரணி வாசிப்புத் தேடல் தான் வாசிக்கும் நேரத்தில் சிந்தனைச்சிறகு காற்றில் பறக்கும்!" என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.
    ஆனால், பதிவாளர்கள் வாசகர் விருப்பறிந்து எழுதினால் பெரு வெற்றி உண்டாம்.

    ReplyDelete
  4. ஆரம்பத்திலேயே என் உருவம் கண்டு ஆனந்த அதிர்ச்சியடைந்தேன் நேசன்! மேய்ச்சல் மைதானத்தில் நீங்கள் அடிக்கடி மேய்வது நான் அறியாத ஒன்று. ரொம்ப சந்தோஷமா இருந்தது. உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி! என்னோடு இங்கே அறிமுகம் பெற்ற என் சகாக்களுக்கு (ஒன்றிரண்டு பேர் எனக்குப் புதியவர்கள்) மகிழ்வுடன் என் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. அனைத்தும் நல்ல தளங்கள்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. அனுபவமுள்ள அறிமுகங்கள். தொடரட்டும் நேசன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. பெரிய ஜாம்பவான்களுடன் இந்த சிறியவனையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி பாஸ்

    பல பதிவர்கள் பல முறை வலைச்சரத்தில் எனக்கு அறிமுகம் கொடுத்திருக்கின்றார்கள்.ஆனால் என் தொடர் ஒன்றிற்கு அறிமுகம் கிடைத்தது இதுதான் முதல் முறை மிக்க நன்றி

    ReplyDelete
  8. நீங்கள் எழுதிய அறிமுக வரிகள் எல்லாம் அருமையாக இருந்தது அனைவருக்கும் ,வாழ் த்துகள் தொடர

    ReplyDelete
  9. நேசன் நல் வாழ்த்துக்கள்!

    இங்கு இன்று அறிமுகமாகும் பதிவர்களில் அறிந்தவர்களும் அறியாதவர்களும் உள்ளனர். அனைவருக்கும் உளமர்ந்த நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  10. காலை வணக்கம்,நேசன்!நலமா?//பதிவாளர்கள் பற்றிய தகவல்களுடன்,நன்றி மறக்காது நினைவு கூர்தல் எல்லோராலும் முடியாதது.அனுபவப் பகிர்வுகள் தொடரட்டும்!தொடரட்டும் ஆசிரியப் பணி.

    ReplyDelete
  11. பல புதியவர்கள் . அத்தனை அறிமுகங்களிற்கும் தங்களிற்கும் இனிய வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்..

    ReplyDelete
  12. சிலர் புதியவர்கள் சென்று வருகிறேன். நன்றிங்க.

    ReplyDelete
  13. வணக்கம்
    (அண்ணா)

    இன்று அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  14. அருமையான அறிமுகங்கள்! நன்றி!

    ReplyDelete
  15. அறிமுகமான அனைத்து வலைப்பதிவர்களுக்கும் வாழ்த்துகள் !!!

    ReplyDelete
  16. அருமையான அறிமுகங்கள்....
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  17. தெரிந்த அறிமுகங்களானாலும் மிகத் திறமையானவர்கள்.அனைவருக்கும் வாழ்த்துகள்.தொடருங்கள் நேசன் !

    ReplyDelete
  18. அறிமுகங்களுக்கு வரழ்த்துகள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது